Saturday, October 13, 2012

மனதே சற்றே உறங்கி போ!

------------------------------------------------------------------------

மனது உறங்காமல்
உறங்கும் போது...

கேட்கா சத்தங்களும்
அலறும் மௌனங்களும்
சன்னமான சங்கீதமாய்...

அறியா உருவங்களும்
தெரிந்த அருவங்களும்
மெல்லிய ஓவியமாய்...

பழகா நறுமணமும்
முகர்ந்த நாற்றங்களும்
இனிய சுவாசமாய்...

மனதே சற்றே உறங்கி போ!




------------------------------------------------------------------------



No comments:

Post a Comment