------------------------------------------------------------------------
மனது உறங்காமல்
உறங்கும் போது...
கேட்கா சத்தங்களும்
அலறும் மௌனங்களும்
சன்னமான சங்கீதமாய்...
அறியா உருவங்களும்
தெரிந்த அருவங்களும்
மெல்லிய ஓவியமாய்...
பழகா நறுமணமும்
முகர்ந்த நாற்றங்களும்
இனிய சுவாசமாய்...
மனதே சற்றே உறங்கி போ!
------------------------------------------------------------------------
No comments:
Post a Comment