Saturday, October 27, 2012

என்னில் என்னை உணர்கிறேன்!


Jokes apart (a light weight poem, and another one),
I wanted to write something bit more traditional; a bit more serious. Of course I wasn't planning to change the society and people's behavior in this, but something that may touch a little bit deeper than the surface. 

I had my questions in my mind, is this too common? Thought about these... however, our general feelings are not changing... For example, if someone pinches one feels the pain... So I guess, it is ok to hear a bit of music inside when there is a pleasant moment, right?

anyways ... here we go! 



மனசுக்குள்ளே 
சன்னமாய் 
ஒரு குழல்  
ஓசை!

கண்ணுக்குள்ளே 
பனித் துகள்கல்களை 
வைத்தது போல 
ஓர் குளிர்வு!

இரவை போர்த்திய 
நிலவை போல 
இதமாய் 
ஓர் அணைப்பு!

மல்லிகைக்குள் 
மணம் எங்கே 
புதைந்து 
கிடக்கிறது... 
தேடி தேடி 
அயர்வு கொள்கிறேன்
என் மனதை 
தேடியது போல! 

உன்னில் என்னை 
உணரும் போது
என்னில் என்னை 
உணர்கிறேன்!


Saturday, October 20, 2012

நவீன பண்பாடு - 3


----------------
புடவை கலாச்சாரம் 
காணாம போயிடுமோ 
என்று 
கவலை கொண்டு... 
நெசவாளி 
பாக்கெட் வைச்ச 
புடவை நெய்கிறான்! 
தையல்காரன் 
குழாய் வைச்ச
உள்பாவாடை தைக்கிறான்! 
------------------


Previous two on this series can be found 



----------------



எல்லாம் உன்னால்தான் ...


I got a comment to one of my previous kavithai that 
it sounded like it was written by a high school/college student. 
That triggered an idea... So lets try this... 

***
பித்தன் கிறுக்கன் 
பைத்தியம் 
என்று எது வேணாலும்  
சொல்...
***

படிக்கும் tweet எல்லாம் 
உன்னை பற்றியே! 
பார்க்கும் flickr எல்லாம் 
உன் படமாய்! 
***

Google தேடல் எல்லாம் 
உன்னில் முடிகிறது!
Map'லெ தேடும்
திசை எல்லாம்
உன்னை காட்டுகிறது!
***

இன்பாக்ஸ்'ல் இதயம்
உருகுது!
SMS'ல இதயம்
துடிக்குது!
***

wine'ல் மிதிபட்ட 
திராட்சை போல,
கள்ளில் மிதந்த 
வண்டு போல,
மனசு பாடு படுகிறது 
பாட்டு படிக்கிறது!
***

எல்லாம் உன்னால்தான் 
என 
நான் அறிவேன்; ஊர் அறியும்; 
நீ அறிவாயா?
***



Friday, October 19, 2012

Mind & Self...

--------------------

"மனசு" 
விதைத்த ஆசை விதை 
சிறிதாய் 
வேர் விட்டு முளை விட்டு 
இலை விட்டு 
வளர்கிறது 
"தான்" 
என்கிற நீர் ஊற்றி!

------------------------

[மனது தனக்கு அடிமையாய் இருக்கும் வரை எல்லாம் நல்லது... 
தான் மனதுக்கு அடிமையானால் ...???!!!]



Monday, October 15, 2012

நவீன பண்பாடு - 2

 I guess this could be series of kavithai. There are so many things to write about in this fashion! Right? Here is a one that I wrote earlier ... நவீன பண்பாடு - 1!


-------------------------------------
"அய்யய்ய! பார்பர் ஷாப் 
பக்கமெல்லாம் போகாதே! 
அபசாரம்!"
என்று அலறிய பாட்டி 
"பேசாம, பியுட்டி பர்லோர் 
போய்ட்டு வா!"
என்று பேத்தியிடம் 
சொல்லி அனுப்பினாள்!




---------------------------------------

Sunday, October 14, 2012

நவீன பண்பாடு!

------------------------------------------


மரம் ஏறாமல்
கிளை பறிக்காமல்
பிண்ணிய பிளாஸ்டிக் மாவிலை 
தோரணம் வரவேற்கும்
நிலை கதவு!

தண்ணீர் தெளிக்காமல்
முதுகு வளையாமல்
வரைந்த ஸ்டிக்கர் கோலம் 
அலங்கரிக்கும்
வாசல் படி!

எண்ணெய் விடாமல்
திரி ஏற்றாமல்
மினுக்கும் லைட் வைத்த விளக்கு 
எரியும்
மாட குழி!




------------------------------------------

Saturday, October 13, 2012

மனதே சற்றே உறங்கி போ!

------------------------------------------------------------------------

மனது உறங்காமல்
உறங்கும் போது...

கேட்கா சத்தங்களும்
அலறும் மௌனங்களும்
சன்னமான சங்கீதமாய்...

அறியா உருவங்களும்
தெரிந்த அருவங்களும்
மெல்லிய ஓவியமாய்...

பழகா நறுமணமும்
முகர்ந்த நாற்றங்களும்
இனிய சுவாசமாய்...

மனதே சற்றே உறங்கி போ!




------------------------------------------------------------------------