Sunday, October 14, 2012

நவீன பண்பாடு!

------------------------------------------


மரம் ஏறாமல்
கிளை பறிக்காமல்
பிண்ணிய பிளாஸ்டிக் மாவிலை 
தோரணம் வரவேற்கும்
நிலை கதவு!

தண்ணீர் தெளிக்காமல்
முதுகு வளையாமல்
வரைந்த ஸ்டிக்கர் கோலம் 
அலங்கரிக்கும்
வாசல் படி!

எண்ணெய் விடாமல்
திரி ஏற்றாமல்
மினுக்கும் லைட் வைத்த விளக்கு 
எரியும்
மாட குழி!




------------------------------------------

2 comments:

  1. நீங்கள் ஏன் இந்த கவிதையை கணினியில் டைப் அடிக்காமல் ஓலைச்சுவடியில் எழுதியிருக்கக்கூடாது ???

    ReplyDelete
    Replies
    1. Yep! நவீன பண்பாடு! What can I say!!!?

      Delete