Friday, September 21, 2012

அப்பாவும் பால்ராசும்!

பால்ரசுவுக்கு படிக்க மிகவும் பிடிக்கும். பெரிசா ரேங்க் எல்லாம் ஒன்றும் வாங்க மாட்டன். ஆனால் நெறைய படிப்பான்.

"லேய் பால்ராசு! இப்ப என்னத்த படிச்சு கலெக்டர் வேலைக்கு போய் கிழிக்க போறியாம்!? பேசாம அப்பாருக்கூட போய் தொழில கத்துக்கலாம் இல்ல?" என்று அம்மா பால் ராச பார்த்து எப்போதும் சொல்லிக்  கொண்டே இருப்பாள். அப்பா அம்மாவை பார்த்து "எந்தாயி, புள்ளைய கடிந்து கொண்டே இருக்கே? சின்ன புள்ளதானே! நாலு எழுத்து படிக்கட்டுமே!" என்பார். 

அப்பாவுக்கு வயதாகிவிட்டது. மிகவும் தளர்ந்து போய் விட்டார். நிதமும் காலையில் தனது சைக்கிள துடைத்து, டையருக்கு காத்து அடித்து, எண்ணெய் குப்பியிலிருந்து எண்ணெய் கிளிக் செய்து... வண்டிய தயார் செய்வார். வண்டியில் பின்னால் பொறுத்த பட்ட மரப் பெட்டியில் கருவாட்ட ரொப்பிக்  கொள்வார்.  தராசையும் எடை கற்களையும் எடுத்துக் கொள்வார். தராசு நிலை சரியா இருக்கா என்று நிறுத்து பார்த்துக் கொள்வார்.

அப்பாவை பார்க்க பாவமாக இருக்கும். நைந்து போன உடலும் கிழிந்து போன உடையும் மனதை உருக்கும். அவருக்கு தொழில் மீது இருந்த பக்தி அவரின் மேல் ஒரு பெரு மரியாதையை உருவாக்கும். அவரின் உழைப்பு என்ன? அவருக்கு என்ன ஊதியம்? என்றெல்லாம் தெரியாது. ஆனா, அம்மா சொல்வது சரிதான். அவருக்கு உதவி செய்த்தான் வேண்டும் என்று தோணும்.

"புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காது. பால் ராசு இன்னைக்கே கிளம்பிடு!" என்று சொல்லி ஒரு நாள் அம்மா தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரிவிட்டு அப்பாவோடு அனுப்பி வைத்தார். அம்மாவிடம் கெஞ்சினான், "எட்டாம் வகுப்பாவது முடிச்டிடறேமா!"

அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அம்மாவுக்கு என்னவோ கவலை இருந்தது. அது அப்பா மேலா இல்ல பால்ராசு மேலா என்று  தெரியவில்லை! அம்மாவை மறுக்க முடியமால் அப்பாவுடன் கிளம்பினான். அப்பா வியாபாரம் செய்யவத கவனித்து வந்தான். வெயில் வாட்டியது.

சில வாடிக்கையாளர்கள் குசலம் விசாரித்தார்கள். "என்ன கருவாட்டுகாரரே, உங்க பையனா? நல்லா சுட்டியா இருக்கானே! படிக்கவைக்கலையா?"

வீடு வந்து சேர்ந்த போது மிகவும் சோர்வாக இருந்தது. வியர்வையோடு கருவாட்டு நாற்றமும் கலந்து குமட்டியது. கிணற்றடிக்கு போய் மேலுக்கு ரெண்டு வாளி தண்ணீர் விட்டு குளித்து வந்தான். சாமி கும்பிட்டு விட்டு அம்மாவிடம் அப்பாவின் பெருமையெல்லாம் பேச ஆரம்பித்தான். அப்பாவின் கஷ்டங்கள் பற்றி பேசினான்.

அம்மா பெருமூச்சு விட்டார். பால்ரசு மேல் நம்பிக்கயுடன், "தம்பி! ரொம்ப நன்றிப்பா! அப்பாவுக்கு ஒத்தாசையா இரு!" என்று அணைத்து கொண்டார்.

இரவு சாப்பிட்டு விளக்கனைத்து படுத்தனர். பால்ராசு, "இதோ வந்திடறேன்மா!" என்று சொல்லிவிட்டு அவனோட ஃபிரன்ட்வீட்டுக்கு ஓடினான். "இன்னைக்கு கிளாஸ்ல வாத்தியார் என்னடா சொல்லிகொடுதாறு?"

2 comments:

  1. This is good chance to learn lot of Tamil Words.Thanks for the chance.Nilai,Kusalam are very new words for me.I don't know "Kusalam" Meaning.what is that?

    ReplyDelete
    Replies
    1. Amutha, kucalam means, checking on their wellness! you can say, when someone asks, "how are you", you can say kusalam/kuchalam visarikirathu!!!

      தராசு நிலை means, checking the balance.

      :-) ... keep reading!

      Delete