Sunday, September 30, 2012

சிவதூதன்!

சீர்காழி சென்றிருந்தார்கள்! செருப்பை காரில் விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் டிக்கெட் ஒன்று கிழித்து கொடுத்தார். டிரைவர், "சார், அஞ்சு ரூபா! பார்க்கிங்!" என்றார். அவருக்கு காசு எடுத்து கொடுத்து விட்டு குடும்பத்தோடு கோயில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில் சிலர் பூ விற்று கொண்டிருந்தனர். சிலர் சைக்கிளில் இளநீர் கட்டி வைத்து விற்றுக்கொண்டிர்தனர். மேலும் பல வர்த்தகங்கள் நடத்து கொண்டிருந்தன.

பிள்ளைகள் இளநீர் வேண்டுமென்று கேட்க இளநீருக்காக நின்றோம். அவர் இளநீர் சீவிய அழகை போட்டோ எடுத்துக்கொண்டனர். அவர் அதை பார்த்து பூரித்து போய் சிரித்து கொண்டே pose கொடுத்தார்.

செல்லும் வழியில் சிறிது பூ வாங்கி சூடிக்கொண்டு, சூடம் கொஞ்சம் வாங்கி கொண்டு மேலும் நடந்தனர். கோயிலின் வாயிலில் நின்று கொண்டு பிரஹாரம் எவ்வளவு நீண்டு கிடக்கிறது என்று பார்த்து பிரமித்து போய் குடும்பத்தாருக்கு சுட்டி கட்டினார் தந்தையார். பிள்ளைகளும், "யெப்பா! எவ்வளவு தூரம் இருக்கும்?  இது அந்த காலத்து சங்கர் படம் போலிருக்கும் போலருக்கே!", என்று மலைத்து போயினர். [Side note: http://templenet.com/Tamilnadu/s088.html -- to know more about Seerkazhi temple!]

ஒவ்வொரு இடமாய் நின்று தந்தையார் கதைகள் சொல்ல பிள்ளைகள் கதைகள் கேட்டு உள்ளே போய் கொண்டிருந்தனர். ஞானசம்பதர் பற்றி, தோணியப்பர் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டனர். கோயிலின் அமைப்பை பற்றியும் அழகை பற்றியும் பேசினர்.

உள் பிரஹாரதிலிருந்து சட்டநாதர் தரிசிக்க வைத்தார் தந்தையர். முதல் நிலையிலிருந்து மூன்றாம் நிலையில் உள்ள சட்டநாதரை தரிசிக்க முடியும். சட்டநாதரை பற்றி அவருக்கு அதிகமா தெரிந்திருக்கவில்லை. "வேறு யாரிடமாவது தெரிந்து கொள்ளவேண்டும்", என்று கூறினார். பின்னர் சுற்றி மலை கோயிலுக்கு அழைத்து சென்றார். அது மலை ஒன்றும் கிடையாது. ஆனால் மலை போல ஒரு அமைப்பு. கல் படிகள் ஏறி செல்ல வேண்டும். மலை கோயிலுக்கு செல்வதற்கு டிக்கெட் வங்கி மேலே ஏறினர். இரண்டாம் நிலையில் இருந்த தோணியப்பரை தரிசித்து முன்றாம் நிலைக்கு சென்றனர்.

அங்குதான் சட்டநாதர் அருளிக்கொண்டிருப்பார். படி ஏற ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் வந்தார். வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். முகத்தில் வெள்ளை முடியுமாக பற்கள் பழுப்புமாக இருந்தார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர்அந்த குடும்பத்தோடு பேச ஆரம்பித்தார். சட்டநாதர் பற்றி சொன்னார். அவரின் கதையை விளக்கினார். "அவர வேண்டிக்கங்க! எல்லாம் நல்ல படியா நடக்கும்." பிறகு தன்னை பற்றியம் தன் கை போன கதையும் சொன்னார்.

அவருக்கு ஏதாவது உதவி செய்யனும் என தோன்ற, அவருக்கு ஒரு 50 ரூபா நோட்டை எடுத்து கொடுத்தார். "ரொம்ப நன்றி ஐயா! இத வாங்கிங்க!" என்றார். அந்த மனிதர் வாங்க மறுத்தார். தந்தையார் மீண்டும் "ஐயா! நீங்க வாங்கி கொண்டே ஆக வேண்டும்" என்றார். அவர் கண்டிப்பாக மறுத்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தார். குடும்பத்தார் அனைவரும் அவர் சொன்ன விஷயங்கள் பற்றியும், சொன்ன விதம் பற்றியும் நினைத்து பார்த்து திகைத்து போய் நின்றனர்.

தந்தையார் அவர தேடி ஓடினார், காசு கொடுத்ததை இழிவா நினைத்து கொண்டிருப்பாரோ என்று தோன்ற அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓடினார். படிகளில் அவர் தென்படவில்லை. கீழே சென்று தேடி பார்த்தார். ம்ஹும்! காணவில்லை! அங்கிருந்த சிலரிடம் அந்த மனிதரின் அடையாளம் சொல்லி விசாரித்தார். "அப்படி யாரையும் பார்க்கவில்லை", என்றனர். மலை கோயிலுக்கு டிக்கெட் விற்று கொண்டிருதவரிடம் விசாரித்தார்! அவருக்கும் தெரியவில்ல! 'இறைவா, யார் அந்த மனிதர்!' ம்ம்ம்! ஒரு பெரு மூச்சு விட்டு மீண்டும் மேல ஏறி சட்டநாதரை தரிசிக்க சென்றார்!





2 comments: