[[ஒரு நிமிட கதை!]]
Here is another one minute story (previous one is here -- http://thaerumutti.blogspot.com/2012/10/blog-post.html! Trying to check how quickly can someone express their feel and emotion! Did it come out?
--------
மதியம் மணி 3 இருக்கும். கார்த்திய கூப்பிட்டு "நண்பா! காபி குடிக்க போலாமா?" என்றான் ராமன்.
கார்த்தி தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்தான். கடையில் ஈ அடிக்கும் நேரம். இதுதான் நல்ல சாக்கு என்று "அப்பா! ராமனோட போய் காபி குடிச்சுட்டு வரேன்! உங்களுக்கு ஏதும் வேணுமா?" என்றான்.
அப்பா, "இல்லப்பா! எனக்கு ஏதும் வேண்டாம். போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க!" என்று சொல்லி அனுப்பினார். காஃபி குடிக்க பத்மாகாபி (bar) பாருக்கு கிளம்பினார்கள்.
"அண்ணே! ரெண்டு காபி ஸ்ட்ராங்'ஆ சக்கர கம்மியா!" என்றான். கசந்ததான் காபி குடிச்ச மாதிரி இருக்கும். ஆர்டர் பண்ணிட்டு ரோடு சைடு'ல நின்னு அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். காபி மாஸ்டர், "ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. பால் சுட்டுகிட்டு இருக்கு!" என்றார்.
அப்போது அங்க ஒரு பெண், 12 வயது இருக்கும். "அண்ணே! சுண்டல் வாங்கிங்கண்ணே!" என்று பாவமாக கேட்டாள்! "இல்லம்மா! வேண்டாம்!" என்றான் ராமன்.
அந்த பெண்ணின் தோற்றமும் உருவமும் பார்க்க மனதை உருக்கியது. "அண்ணே! ப்ளீஸ்ண்ணே. வீட்டுல அம்மா தம்பி எல்லாரும் பசியோட இருக்காங்க. நான் சிக்கரமா வித்துட்டு போனாதான் கஞ்சி காய்ச்ச முடியும்! ப்ளீஸ்ண்ணே!" என்று கெஞ்சினாள்! அந்த கண்கள் கலங்கி மல்கின! குரல் இரங்கின!
ராமன், "சுண்டல் சாப்பிடற மூட்'ல இல்ல. வேணும்னா, இந்தா 50 காசு வச்சுக்கோ, இடத்த காலி பண்ணு!" என்று விரட்டினான். அவள், "எனக்கு காசு வேணாம்'ணே! சுண்டல் வாங்கிங்க! பசில வாடுவோமே தவிர பிச்சை எடுக்க மாட்டோம்'ணே"! என்று கண்டிப்பாக காசு வங்க மறுத்து விட்டாள்.
கார்த்திக்கு பாவமாக இருந்தது. "மாப்ள! எனக்கு காபி வேண்டாம்! சுண்டல் வாங்கிக்கிறேன்டா!" என்றான்!
-------------------------
Here is another one minute story (previous one is here -- http://thaerumutti.blogspot.com/2012/10/blog-post.html! Trying to check how quickly can someone express their feel and emotion! Did it come out?
--------
மதியம் மணி 3 இருக்கும். கார்த்திய கூப்பிட்டு "நண்பா! காபி குடிக்க போலாமா?" என்றான் ராமன்.
கார்த்தி தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்தான். கடையில் ஈ அடிக்கும் நேரம். இதுதான் நல்ல சாக்கு என்று "அப்பா! ராமனோட போய் காபி குடிச்சுட்டு வரேன்! உங்களுக்கு ஏதும் வேணுமா?" என்றான்.
அப்பா, "இல்லப்பா! எனக்கு ஏதும் வேண்டாம். போயிட்டு சீக்கிரம் வந்திடுங்க!" என்று சொல்லி அனுப்பினார். காஃபி குடிக்க பத்மாகாபி (bar) பாருக்கு கிளம்பினார்கள்.
"அண்ணே! ரெண்டு காபி ஸ்ட்ராங்'ஆ சக்கர கம்மியா!" என்றான். கசந்ததான் காபி குடிச்ச மாதிரி இருக்கும். ஆர்டர் பண்ணிட்டு ரோடு சைடு'ல நின்னு அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். காபி மாஸ்டர், "ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. பால் சுட்டுகிட்டு இருக்கு!" என்றார்.
அப்போது அங்க ஒரு பெண், 12 வயது இருக்கும். "அண்ணே! சுண்டல் வாங்கிங்கண்ணே!" என்று பாவமாக கேட்டாள்! "இல்லம்மா! வேண்டாம்!" என்றான் ராமன்.
அந்த பெண்ணின் தோற்றமும் உருவமும் பார்க்க மனதை உருக்கியது. "அண்ணே! ப்ளீஸ்ண்ணே. வீட்டுல அம்மா தம்பி எல்லாரும் பசியோட இருக்காங்க. நான் சிக்கரமா வித்துட்டு போனாதான் கஞ்சி காய்ச்ச முடியும்! ப்ளீஸ்ண்ணே!" என்று கெஞ்சினாள்! அந்த கண்கள் கலங்கி மல்கின! குரல் இரங்கின!
ராமன், "சுண்டல் சாப்பிடற மூட்'ல இல்ல. வேணும்னா, இந்தா 50 காசு வச்சுக்கோ, இடத்த காலி பண்ணு!" என்று விரட்டினான். அவள், "எனக்கு காசு வேணாம்'ணே! சுண்டல் வாங்கிங்க! பசில வாடுவோமே தவிர பிச்சை எடுக்க மாட்டோம்'ணே"! என்று கண்டிப்பாக காசு வங்க மறுத்து விட்டாள்.
கார்த்திக்கு பாவமாக இருந்தது. "மாப்ள! எனக்கு காபி வேண்டாம்! சுண்டல் வாங்கிக்கிறேன்டா!" என்றான்!
-------------------------