[[ஒரு நிமிட கதை! This is attempt on short - short story where readers can read this story one minute or less!]]
காலையில் பல் விளக்கி குளித்து டிபன் சாப்பிடுவது போல இந்த பசங்களுக்கு, மாலையில் டிரஸ் பண்ணி கோயில் பக்கம் போய் சைட் அடிக்காவிட்டால் நாள் முழுமை ஆகாது. அன்று ஹோஸ்டலருந்து கரிகாலன் தன் நண்பர்களுடன் கிளம்பினான்!
காம்பஸ் விட்டு வெளிய வரும்முன்னே தூரத்தில் ரெண்டு பெண்கள், தாவணியில் ஒருத்தி, சுடியில் இன்னொன்று. மாலை கல்லுரி படிப்பவர்கள் போல் தோன்றியது. பக்கத்தில் மூன்று பசங்க! அந்த செட்டப்பை பார்க்கும் போதே இந்த பசங்க பெண்களை டீஸ் செய்கிறார்கள் என்று புரிந்தது.
கரிகாலன் கிட்ட நெருங்க அந்த பெண்களில் ஒருத்தி அவனை பார்த்து, "அண்ணா! ப்ளீஸ் ஹெல்ப்! இந்த பசங்க எங்களை கிண்டல் பண்றாங்க!" என்றாள்.
கரிகாலனால் அதை தாங்க முடியவில்லை! மிகவும் கோபம் வந்தது. தன் நண்பர்களை பார்த்து, "டேய் மச்சி! என்னால இதை பொறுக்க முடியல! ரெத்தம் கொதிக்கிறது!" என்றான். நண்பர்களுக்கு ஒன்றும் புரியல! "கரிகாலனா இது?" என்று ஒரே ஆச்சரியம்.
யோசித்து கொண்டிருக்கும்போதே, அந்த பெண்ணை பார்த்து, "இத பார்! அந்த பசங்கள நான் பார்த்துக்கறேன். ஆனா, என்னை அண்ணான்னு மட்டும் கூப்பிடாத!" என்றான்!
:-)